பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010


நண்பர்களே!


எல்லோரும் நலம்தானே?கொஞ்சம் சந்தேகம்தான்.எப்படி என்றா கேட்கிறீர்கள்?என்னுடைய எழுத்தை எல்லாம் படித்து விட்டு எப்படி நலமாக இருப்பீர்கள் .இன்று நாட்டிலே பல பிரச்சினைகள் இருக்கும்போது இவன் எழுதிக் கொண்டு இருக்கிறானே என்றுநீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

விசாரணை

என்ன படித்தீர்களா?என்னை பற்றி என்ன நினைக்க தோன்றுகிறது ?

இவன் பெரிய எழுத்தாளன் ஆகி விடுவான் என்ற பயமா?

பயப் படாதீர்கள்.உங்களை இறைவன் காப்பாற்றுவான்.

யார் யாரோ எழுதுகிறார்கள்.அப்பொழுதெல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை,நான் எழுதினால் மட்டும் உலகம் அழிந்து விடுமா என்ன?

கவிஞர் கனிமொழியே கவிதை எழுதும் போது நான் எழுதினால் மட்டும் என்ன குறைந்தா போய் விடும்!பயப் படாதீர்கள்.ஆண்டவன் உங்களை காப்பாற்றுவாராக!எதையும் தாங்கும் இதயம் இருந்தால்.

திங்கள், 22 பிப்ரவரி, 2010

நானே ராஜா -நானே மந்திரி

ஈரேழு பதினாலு லோகம் அல்ல ,என்னுடைய சந்த்ரலோகத்தையும் சேர்த்து பதினைந்தாக வைத்து கொள்ளுங்கள்.
இந்த லோகத்திற்கு நானே ராஜா,நானே மந்திரி.
இதுதான் எனது வலை உலக முதல் பதிவு.நன்றாக இருந்தாலும் சரி ,நன்றாக இல்லாவிட்டாலும் சரி,நீங்கள் அதை சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.
சந்த்ரலோகம் என்றால் என்ன?
  • சந்திரன் என்றால் நான்.நான் இருப்பது இந்த உலகத்தில்.
  • அதில் எனக்கு என்று ஒரு தனி உலகம்.அதுதான் சந்த்ரலோகம்.
  • இந்திரலோகம் என்றால் அங்கே இந்திரன் முதலான தேவர்கள் இருப்பார்.
  • இங்கே சந்த்ரலோகத்தில் சந்திரன் நான் இருக்கின்றேன்.
  • என்னடா இவன் இந்த மொக்கை போடுகிறான் என்று உணர்ச்சிவசபடாதீர்கள்.இதை எல்லாம் படிக்க வேண்டும் என்பது உங்கள் தலைஎழுத்து.
  • என்னுடைய எழுத்துக்களையும் படிக்க வேண்டும் என்றால் ஒரு தனி அம்சம் வேண்டும்.அது உங்களுக்கு இருக்கிறது.அதனால்தான் இந்த இடுகை உங்களை தேடி வருகிறது,தவறாமல் படித்து உங்கள் கருத்துக்களை எதிரொலியாக தெரிவியுங்கள்.

நானே ராஜா.,நானே மந்திரி



  • எனக்கு என்று ஒரு உலகம் .
    அதில் நானே ராஜா .,நானே மந்திரி .இங்கே சட்டங்கள் போடுவதும் நான்தான் .
    அதை மீறுவதும் நான்தான்.என்னை கேள்வி கேட்க யாருக்கும் இங்கே உரிமை இல்லை .


  • இதுதான் எனது முதல் பதிவு .சரியோ இல்லை தவறோ இதை நீங்கள் சகித்து கொண்டுதான் ஆகவேண்டும் .ஆம் உங்களுடைய தலைஎழுத்து அதுதான் என்றால் விட்டா போகும்.